Sunday, March 25, 2012
ஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல்
வாழும் வனத்தில்
எத்தனை மிருகங்கள்
எனையும் சேர்த்து
சோர்ந்துவிடாமல்
துயரங்கள் கவனமாய்
பார்த்துக்கொள்கிறது
இருதயத்தின் கேவல்களை
கேட்டுக்கொண்டிருந்தால்
கேந்திரத்தின் மாயவெளி
எட்டாமல் மறக்கும்
கடைசி ஆணாய் வாழவிருந்தால்
சமையல் உன் கடவுள்
பெண்ணாய்? – காத்து படைப்பதனால்
அவளுக்கு திமிரே போதுமானது
போனாபோகிறது என
ஒரு ஆணை கொடுப்போம்
படைத்தலுக்கு எதிராய் வார்த்தைகள்
யான் பேசேன் என் ஈசனே!
ஈசானே
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அதென்ன டைட்டில் ஜிங்கில் ஜிங்கா ஜிங்க்கு?? தனித்தியலே நல்லா இருக்கே.. சொல்லப்போனா இந்த வார்த்தையை சமீபத்தில் உங்கள் தளத்தில்தான் பார்க்கிறேன்.. தனித்தியல்... அழகான வார்த்தை..
நட்புடன்
கவிதை காதலன்
:)
சோர்ந்துவிடாமல்
துயரங்கள் கவனமாய்
பார்த்துக்கொள்கிறது
இந்த வரியை மட்டும் திரும்ப திரும்ப யோசித்து கொண்டு இருந்தேன். உண்மை. உள் அர்த்தம் விரிந்து கொண்டே போகிறது.
நன்றி மணிகண்டவேல், ச.முத்துவேல், சாய்ராம் :)
Post a Comment