சுழித்து ஓடும் வார்த்தைகள்
வழித்து செல்லும் உடல்வாகு
வகுத்து சொல்லும் மனஒழுக்கு
எனக்கு அதில் எப்பொழுதும் பினக்கு
வாசிக்கப்படாத தாளின் வாசனை - அதன்
போக்கிலே எழுதிசெல்லும் கவிதை
காத்திருக்கிறேன் அவளை
காயப்படுத்தும் வார்த்தைக்காக
சதுரங்க விளையாட்டில்
சாஸ்த்திரங்களுக்கு இடமில்லை
மோகலாய பேரரசு பரப்பிய
ஆதித வாசனை ஒவ்வாமை
சுகங்களை மட்டுமே நிரப்பிய கனவுகள்
அபத்தங்களின் தொகுப்பே நினைவுகள்
சாமியென்றும் சன்யாசியென்றும்
ஞானியென்றும் சித்தனென்றும்
தூறலையே மழையென்றால்
மழையை என்னவென்பீர்
இங்கே நான் என்பது
நீங்களாகவும் இருக்கலாம்
வேறுஏதாவதாகவும் ....
எழுதியே எழுத்தாளன்
வானமாகிறான் – படிப்பவன்
வனமாகி....வானரமாகி
வழித்து செல்லும் உடல்வாகு
வகுத்து சொல்லும் மனஒழுக்கு
எனக்கு அதில் எப்பொழுதும் பினக்கு
வாசிக்கப்படாத தாளின் வாசனை - அதன்
போக்கிலே எழுதிசெல்லும் கவிதை
காத்திருக்கிறேன் அவளை
காயப்படுத்தும் வார்த்தைக்காக
சதுரங்க விளையாட்டில்
சாஸ்த்திரங்களுக்கு இடமில்லை
மோகலாய பேரரசு பரப்பிய
ஆதித வாசனை ஒவ்வாமை
சுகங்களை மட்டுமே நிரப்பிய கனவுகள்
அபத்தங்களின் தொகுப்பே நினைவுகள்
சாமியென்றும் சன்யாசியென்றும்
ஞானியென்றும் சித்தனென்றும்
தூறலையே மழையென்றால்
மழையை என்னவென்பீர்
இங்கே நான் என்பது
நீங்களாகவும் இருக்கலாம்
வேறுஏதாவதாகவும் ....
எழுதியே எழுத்தாளன்
வானமாகிறான் – படிப்பவன்
வனமாகி....வானரமாகி